Tuesday, December 8, 2009

என்னுள்ளே... என்னுள்ளே...

alone














ங்கிங்கெனாதபடி எங்கும்
இருக்கிறாய் நீ...

என்னைச் சுற்றியுள்ள
எல்லாவற்றிலும்...

என்னைக்
குத்திக் கிழித்து
கடந்து செல்லும்
ஒவ்வொரு
நொடித் துகளிலும்
வரம்புகளின்றி பிணைந்து
கிடக்கிறாய் நீ...
உன் நினைவுகளால்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறேன்
நான்...

பல முறை யோசித்தும்
ஒருபோதும் கண்டுபிடிக்க
முடிந்ததில்லை என்னால்..
"இத்தனை ஆழமாய் நீ
என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."

10 comments:

  1. அம்பி உன்கிட்டயும் நுழைஞ்சுட்டாளா?

    ReplyDelete
  2. நீங்க வேற ஜாக்கியண்ணே.... :)

    ReplyDelete
  3. //பல முறை யோசித்தும்
    ஒருபோதும் கண்டுபிடிக்க
    முடிந்ததில்லை என்னால்..
    "இத்தனை ஆழமாய் நீ
    என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."//

    கடைசிவரை கண்டுபிடிக்க முடியாதது:-)

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை பேரு இந்த மாதிரி என்டர் பட்டன் தட்ட போராங்களோ தெரியல ...

    ReplyDelete
  5. //பல முறை யோசித்தும்
    ஒருபோதும் கண்டுபிடிக்க
    முடிந்ததில்லை என்னால்..
    "இத்தனை ஆழமாய் நீ
    என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."//

    மணிக்கு உள்ள இருக்குறது யாருங்க.................

    ReplyDelete
  6. ஆகா,.....கெளம்பிட்டாய்யா கெளம்பிட்டாய்யா :)

    ReplyDelete
  7. நல்ல கவிதை. //பல முறை யோசித்தும்
    ஒருபோதும் கண்டுபிடிக்க
    முடிந்ததில்லை என்னால்..
    "இத்தனை ஆழமாய் நீ
    என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."// சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  8. @ பிரியா - ஆமாங்க... நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.. :)

    @ ரோமியோ - கற்பனையும் கம்ப்யூட்டரும் உள்ள வரைக்கும்... :)

    @ சங்(க்)கவி - சத்தியமா யாருமில்லீங்க... :)

    @ தோழி கிருத்திகா - வாங்க மேடம்.. தலைவர் பிறந்தநாள் சிறப்பு பதிவு எப்போ??

    @ தமிழ் உதயம் - ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  9. எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

    ReplyDelete
  10. வாங்க கலையரசன்... வாழ்த்துக்கு நன்றி... :)

    ReplyDelete