Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010

2010
இன்னும் சில மணி நேரங்களில் கடந்து செல்லவிருக்கும் 2009-ம் ஆண்டு, எனக்கு அதிக மகிழ்ச்சிகளையும், நல்ல புதிய நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.. நெருக்கடியான உலக பொருளாதார சரிவின்போதும் எனக்கு ஊதிய உயர்வு (எதிர்பார்த்தது இல்லன்னாலும் கொடுத்தாங்க பாருங்க), பணியில் நிறைய புதுவிஷயங்கள் கத்துக்கற வாய்ப்பு, ஒருவழியா நானும் பதிவெழுதத் துவங்கியது, பல புதிய பதிவுகள்/பதிவர்கள் அறிமுகம் மற்றும் நட்பு, அப்படின்னு ரொம்ப நல்லாவே போச்சுங்க இந்த வருஷம்..

என்னது..? வருத்தப்படற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா'வா? நீங்க வேற... அதுவும் கொஞ்சம் இருந்தது.. ஆனால், புது வருஷத்தை வரவேற்கத் தயாராகும் இந்த இனிமையான நேரத்தில் அதெல்லாம் எதுக்கு?? சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்லும் "நல்லதை மட்டும் எடுத்துக்கங்க.. கெட்டதை அப்படியே விட்டுடுங்க" பாலிசி தான்...

எல்லா வருடமும், இன்னும் தொடர்பிலிருக்கும் என் பள்ளி நண்பர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் தான் பீச், பார்ட்டி என்று புதுவருடத்தைக் கொண்டாடுவேன்.. ஆனால், இந்த வருடம், வீடு மாறிவிட்டதாலும், நண்பர்கள் அனைவரும், வேலைநிமித்தமாய் வெளியூரில் இருப்பதாலும், ஆர்பாட்டம் ஏதுமில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன்.. புதுவருடப் பிறப்பை நோக்கி... Really Missing You Guys!!!

பிறக்கப் போகும் 2010-ம் ஆண்டும் இறைவனின் அருளால் பல மகிழ்ச்சியான விஷயங்களை அள்ளித்தரும் என்று நம்புகிறேன்.. பார்ப்போம்..

ஓகே.. உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. ஸ்டார்ட் மியூசீக்க்க்க்க்க்....

Sunday, December 27, 2009

நிகழ்(ச்)சுவை 27-12-2009

பொது

2009-ம் வருடத்தின் கடைசி ஞாயிறான இன்று டிவியில் கொஞ்சம் கிரிக்கெட், ஜாக்கி சானின் நியூ போலீஸ் ஸ்டோரி திரைப்படம், சூடான லஞ்ச், சுகமான மதிய தூக்கம் என்று இனிதாகவே கழிந்தது.. நேற்று டிசம்பர் 26 சில வருடங்களுக்கு முன்பு, மெரினாவில் சுனாமியிடம் தப்பித்து ஓடியது நினைவுக்கு வந்தது.. அந்த பாதிப்பை கவிதையாக்க முயன்றிருந்தேன்.. அது இங்கே..

தெலுங்கானா பிரிப்பது பற்றிய முடிவுக்கு வர மத்திய அரசுக்கு நாளைக்கு கெடுவாம்.. அந்த விஷயம் பற்றிய முழு வரலாறு தெரியாது.. எனினும் எந்த சேனலை மாற்றினாலும் தொடரும் வன்முறை, பற்றி எரிகிறது ஆந்திரா என்று ஒரே திகிலாகவே இருக்கிறது.. பிரித்துக் கொடுத்துவிட்டால் இது இந்தியா முழுக்க தொடர்கதையாகும் அபாயம் இருக்கிறது.. எது நடந்தாலும் பாதிக்கப்படப் போவதென்னவோ அப்பாவி மக்கள் தான்.. ஆர்பாட்டத்தாலும் வன்முறையாலும் இதுவரை நாசமான பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.250 கோடியாம்.. இந்த அழகில், ஆந்திர ஆளுநர் பெண்களுடன் உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டு இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்..

சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட், விசா எதுவுமின்றி "வித் அவுட்டில்" வந்த ஒருவரை பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.. சவுதி விமான நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியான இவர், எப்படியோ சக ஊழியர்களை சரிகட்டி விமானத்தின் டாய்லட்டில் ஒளிந்துகொண்டு பயணம் செய்திருக்கிறார்.. ஒரு படத்தில் பார்த்திபன் வடிவேலுவிடம், "நாங்கல்லாம் பிளைட்லேயே டிக்கட் எடுத்தது கிடையாது" என்று சொல்வாரே.. அது தான் நினைவுக்கு வந்தது..


சினிமா

ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் காணக் கிடைத்தது.. கண்டிப்பாக வித்தியாசமான முயற்சிதான் என்பதும், கொடுத்த டிக்கட் காசுக்கு பங்கம் வராது என்பதும் சில கிளிப்பிங்களிலேயே தெரிகிறது.. ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது கமலே சற்று அசந்து தான் போய்விட்டார்.. அந்த படபடப்பு அவரின் பேச்சிலேயே தெரிந்தது..
அதை யு-டியுப்'பில் தேடிப் பிடித்துப் பாருங்கள்..

இன்னும் அவதார் பார்க்கவில்லை.. சத்யமில் டிக்கட் கிடைக்காததால்.. இந்தப் படத்தை 3D யில் மட்டுமே பார்க்கணும் என்று நண்பர்கள் பலரும் சொல்லியிருக்காங்க.. அதான்..

அதுக்கப்புறம் பொங்கலுக்குத்தான் நெறைய படங்கள் வெளியாகிறது போல.. அதுவரை சன் டிவி சேனல்களில் விஜய்யும், மற்ற சேனல்களில் நகுலும், கால்மணிக்கொரு முறை வெற்றிநடை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்..


விளையாட்டு


இநதிய-இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று.. துவக்கம் முதலே இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மேட்ச், திடீரென்று ஆடுகளம் அபாயகரமாக இருக்கிறது என்ற காரணத்தால் பாதியிலேயே கைவிடப் பட்டது.. என்னக் கொடுமை சார் இது? வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியாவில் எல்லாம் முக்கால்வாசி பவுன்சி ட்ராக் தானே? அங்கேயும் நாலு அடிவாங்கிட்டு பிட்ச் சரியில்லை, அபாயகரமா இருக்குன்னு சொல்லிட முடியுமா?? ஆடத் தெரியாதவ கூடம் கோணல்'ன்னு சொன்ன கதையால்ல இருக்கு..


கவிதை

பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்கிறேன் நான்...

என்னை விழுந்து விடாமல்
பற்றிக் கொள்கிறது - உன்
நினைவுகள் என்னும் வேர்கள்...



**********
இப்போதைக்கு அவ்வளவு தாங்க.. பிடிச்சிருந்தா மறக்காம உங்கள் கருத்தையும், ஓட்டுகளையும் தந்துட்டுப் போங்க..

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் – எனது பார்வையில்

vettaikaran
நேற்று இரவு முதலே பல பதிவுகளில் (நெகடிவ்வாக) விமர்சனங்கள் வரத்தொடங்கினாலும், விஜய், அனுஷ்கா, சன் டிவி, ஏவிஎம், நண்பர் நடிகர் சத்யன், துள்ள வைக்கும் பாடல்களால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் இன்னபிற காரணங்களால் டிக்கெட் முன்பதிவு செய்து இன்று அம்பத்தூர் ராக்கியில் பகல் காட்சி போயிருந்தேன்.. உண்மையிலேயே விஜய் செம மாஸ்'ப்பா..

அதே வழக்கமான, ஏதோ ஒரு லட்சியத்துடன் வரும் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லனை எதிர்த்து போராடி, நடுநடுவே, ஹீரோயினுடன் காதல், காமெடி என்று கலந்து கட்டி, இறுதியில் வெற்றிபெறும் தமிழ் சினிமாவுக்கே உரித்தான அரதப் பழசான கதை. ஆனால்.. லாஜிக் சற்றுமில்லாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் பிசிறடிக்கிறது படம்.. முதல்பாதி ஓரளவுக்கு கலகலப்பாய் நகர்ந்தாலும் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டதைப் போன்றதையொத்த காட்சிகள் என்பதால் சலிப்பே மிஞ்சுகிறது..

விஜய்யை பொறுத்தவரை, தன் பங்களிப்பை சரியாய் செய்திருக்கிறார்.. காமெடி மற்றும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்'களில் கவனம் செலுத்தும் இவர், கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.. நீர் வீழ்ச்சியிலிருந்து குதிப்பது, காரோடு பறப்பது, அடிக்கும் போது எதிரிகள் பலமைல் தள்ளிப் போய் விழுவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் ஏன் சார் ஒத்துக்கறீங்க?? (படத்தின் ஆரம்பத்தில் கும்மாளமாய் ஆட்டம் போட்ட விஜய்யின் தீவிர ரசிகர்களே கூட இதுபோன்ற காட்சிகளால் நொந்துபோய் கமெண்ட்ஸ் அடித்ததைக் காண முடிந்தது..)

அனுஷ்கா சில/பல காட்சிகளில் விஜய்யை விட பெரியவராக/உயரமாகத் தெரிகிறார். அருந்ததி அளவுக்கு இத்திரைப்படத்தில் நம்மை ஈர்க்கவில்லை என்பதே உண்மை..

சத்யன், ஸ்ரீநாத், ஷாயாஜி போன்றோர் சிரிக்கவைக்க முயல்கின்றனர்.. ரொம்ப படங்களுக்குப் பின் நண்பர் சத்யனுக்கு நிறைய காட்சிகளில் வரும் வாய்ப்பு..

சாய்குமார், சலீம் கௌஸ், இன்னொரு தெலுங்கு பட வில்லன்.. இவர்களின் பாத்திரப் படைப்பு கர்மம்'டா சாமி.. அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வருபவர் மட்டும் (அவரும் தெலுங்காம்) கொஞ்சம் ஓகே.. சுகுமாரி, டெல்லி கணேஷ், கொச்சின் ஹனீபா ஆகியோரும் இருக்கிறார்கள்..

மற்றபடி, எடிட்டிங், இசை, நடனம், கலையலங்காரம், ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களும் அந்தளவுக்கு கதைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் அடுத்த விஷயம்..

மொத்தத்தில் ஒரு திரைப்படத்தை ஹிட்'ஆக மாற்றக்கூடிய சில அம்சங்கள் இதில் மிஸ்ஸிங் என்றாலும் சன் டிவி என்ற பிரம்மாண்டம் துணையிருக்கிறது.. பார்ப்போம்..

எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...

Saturday, December 12, 2009

என்றென்றும் சூப்பர் ஸ்டார்

1992-ம் ஆண்டின் துவக்கமென்று நினைக்கிறேன்.

சென்னை (மைலாப்பூர்) லஸ் கார்னரில் இருந்த காமதேனு
தியேட்டரில் குடும்பத்துடன் தளபதி மாலைக்காட்சி.

காதைப் பிளக்கும் விசில் சப்தங்கள்.. இடைவெளியற்ற கரகோஷங்கள்.. எங்கும் பறக்கும் காகிதத் துகள்கள்.. பல்வேறு விதமாய் உற்சாகக் கூச்சல்கள்.. இதன் நடுவே தான் முதன் முறையாய் பெரிய திரையில் எனக்கு அறிமுகம் ஆனார் ரஜினி.

நாங்கள் உள்ளே சென்றபோது "ராக்கம்மா கையத் தட்டு" பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து திரையரங்கமே ஆடிக் கொண்டிருந்தது. துள்ளாட்டம் போடும் ரசிகர்களின் தலைகளுக்கு மத்தியில் அவரின் முகத்தை சரியாகப் பார்க்கவே வெகு நேரம் பிடித்தது எனக்கு. ஒருவழியாய் பார்த்தும் விட்டேன். வாவ்.. அது தான் நான் அவரின் ரசிகனாய் மாறிப் போன மாய நொடிகள். அன்று முதல் இன்று இந்த நொடி வரை அவரின் ரசிகனாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!!!

என்னைக் கவர்ந்த அவரின் திரைப்படங்கள், அரசியல் நிலைப்பாடுகள், ஆன்மீக தேடல்கள், மனிதநேய செயல்கள் இதையெல்லாம் பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு தாங்காது...

எனவே.. என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என் இதயப் பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

நீங்களும் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக அவரை வாழ்த்திச் செல்லுங்கள்..

இது நமக்கு... :)




Tuesday, December 8, 2009

என்னுள்ளே... என்னுள்ளே...

alone














ங்கிங்கெனாதபடி எங்கும்
இருக்கிறாய் நீ...

என்னைச் சுற்றியுள்ள
எல்லாவற்றிலும்...

என்னைக்
குத்திக் கிழித்து
கடந்து செல்லும்
ஒவ்வொரு
நொடித் துகளிலும்
வரம்புகளின்றி பிணைந்து
கிடக்கிறாய் நீ...
உன் நினைவுகளால்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறேன்
நான்...

பல முறை யோசித்தும்
ஒருபோதும் கண்டுபிடிக்க
முடிந்ததில்லை என்னால்..
"இத்தனை ஆழமாய் நீ
என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."

Friday, December 4, 2009

நிகழ்(ச்)சுவை 04-12-2009

என் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துபரோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே.. படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்...


*****************
பதிவுலகம்
வேறெதைப்பற்றி சொல்ல முடியும்..?? சக பதிவர் நர்சிம்'மின் படைப்புகளின் முதல் தொகுப்பாக "அய்யனார் கம்மா" என்ற புத்தகம் வெளிவரவிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதுகுறித்த பதிவுகளின் சுட்டி இங்கே. நேரில் சென்று வாழ்த்தி அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம் என்றிருக்கிறேன்.
அது ஒருபுறமிருந்தாலும் Congrats Narsim...!


********************
விளையாட்டு
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய-இலங்கை டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் அட்டகாசமான அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார் வழக்கம் போல. வெற்றிகரமாய் 300'ஐத் தாண்டி லாராவின் சாதனையை தகர்ப்பார் என்று நம்பியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக 293'ல் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா... இலங்கை அணியினர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். ஒரே நாளில், 40x4, 7x6 உடன் 284 ரன்கள். Unbelievable!!!... மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அடைந்திருக்கும் குதூகலத்தை உணர முடிகிறது. மற்றொரு விஷயம், தமிழக வீரர் முரளி விஜயின் நேர்த்தியான துவக்க ஆட்டம். Well Done Vijay!!!... மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரின் அரைசதங்களால் இப்போதைக்கு இந்த மேட்ச் இந்தியாவின் வசம் இருக்கிறது.. பார்ப்போம்..


*********************
சினிமா
இன்னைக்கு ஆதவனின் ஐம்பதாவது நாள் போஸ்டரைப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஏம்பா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

தற்போதைக்கு பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியிருக்கும் படம் ரேனிகுண்டா. கேபிளாரின் விமர்சனத்திற்காக வெயிட்டிங்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசைவெளியீடு லண்டனில் நடைபெறவிருக்கிறதாம். நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


*************
பொது

வேதாரண்யம் பள்ளிக்குழந்தைகளின் வேன் விபத்து சோகத்துக்குள்ளாக்கியது. வேன் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் பழக்கமுடையவராம். இவனுங்கள என்னத்த சொல்றது???

"குடி"மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. டாஸ்மாக்'கிலேயே திருட்டுத் தனமாக சரக்கில் தண்ணீர் கலந்து விற்கிறார்களாம். அதான் நம்ம ஆளுங்க எவ்ளோ அடிச்சாலும் கிக்கே இல்லையேன்னு புலம்புறாங்களோ???

இருக்கிற செல்போன் சேவை பத்தாதுன்னு "யுனினோர்" என்று ஒருத்தன் வந்திருக்கான். எல்லா சிக்னல் கம்பங்களிலும் இவன் விளம்பர போர்டை வைத்திருக்கிறான். பார்க்கலாம்.. மக்களை மடையர்களாக்க இவன் என்ன பிளான் வைத்திருக்கிறான் என்று..


*****************
கவிதை (இது என்னுடையது தான்)

கவிதை கேட்கிறாய் நீ...

உன்னைப் பற்றி யோசிக்கவே
நேரம் போதவில்லை எனக்கு...
பின் எப்படி யோசிப்பேன்
கவிதைக்கான வார்த்தைகளை???

எதையாவது கிறுக்கி அனுப்புகிறேன்...
உன் பார்வை பட்டால் என்
கிறுக்கல்களுக்கும் கிடைத்துவிடும்
"கவிதை" எனும் பட்டம்!!!