Saturday, July 25, 2009

நீ... நான்... மற்றும் மழை!

யார் சொல்லியும்Love & Rain
கேட்காமல் நனையத்துடிக்கும்
உன் செல்ல திமிரை
நினைவூட்டியது..
நேற்று பெய்த மழை...

********************************************

நனைந்து விட்ட
என் தலைமுடி துவட்டுகிறாய்...
உன் துப்பட்டாவின் தயவால்
மீண்டும் மேகம் சேர்கின்றன
மழைத் துளிகள்...

********************************************
புயலாய் என்னை மையம் கொண்டு
மழையாய் நனைக்கின்றன
உன் நினைவுகள்...
கரையேற விரும்பாத கட்டுமரமாய்
தத்தளிக்கிறேன் நான்...

9 comments:

  1. வாழ்த்துக்கள் மணிகண்டன். நிறைய எழுதுங்கள்.வலம்வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி நர்சிம்..
    தொடர்ந்து என்னை இயக்குங்கள்.. உங்கள் ஆதரவுடன்!

    ReplyDelete
  3. நல்ல கவிதை….தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். தமிழிஸ், தமிழ்மணம் திரட்டியிலும் சேருங்கள்..

    அவிங்க ராசா

    ReplyDelete
  4. கடைசி கவிதை நல்லாயிருக்கு நண்பா!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நன்றி ராஜா சார்...
    நன்றி பரிசல் சார்..

    ReplyDelete
  6. //நனைந்து விட்ட
    என் தலைமுடி துவட்டுகிறாய்...
    உன் துப்பட்டாவின் தயவால்
    மீண்டும் மேகம் சேர்கின்றன
    மழைத் துளிகள்...//

    இதுதான் டாப்பு!
    தொடரட்டும் உங்கள் சேவை மணி!!

    ReplyDelete
  7. நன்றி கலையரசன்..

    ReplyDelete
  8. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  9. மிக்க நன்றி செய்திவளையம்!!!

    ReplyDelete